Wednesday, September 15, 2021
தொடர்ச்சி
அம்மா, அம்மா, வரும்போதே அம்மா புராணம்ப் பாடிக் கொண்டு வீட்டில் உள்ளே நுழைத்தாள் மதுவந்தி. கத்திரி வெயில் மண்டையைப் பிளக்கிறது. கடவுளே ஒரு மழைச் சாரலுக்கு பஞ்சம் வந்து விட்டதா? தயவு செய்து கருணை வேண்டும் பகவானே.
என்னடி என் கிட்டக் குறைக் கூறுகிறார் போல் ஸ்வாமி கிட்டேயும்ப் பெட்டிஷன் ஆஹ்?
நான் என்ன எனக்கு மட்டும் மா வேண்டுகிறேன் மழை வந்தால்ப் பூமிக் குளிரும், கொஞ்சம் இந்த வெயிலின் தாக்கம் குறையும். காபியைக் கொடு மா அப்புறம் வச்சுக்கோ உன்னுடைய வியாக்யானம்.
அப்புறம் சொல்லு, புது ஆபீஸ், புது பாஸ், புது டீம் லீடர், எப்படி இருந்தது முதல் நாள் அனுபவம்? அதை ஏன் மா கேட்கிறாய், என்று ஆரம்பித்து அன்று நடந்த முழுக் கதையையும் சொல்லி முடித்தாள். பொதுவாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மாவிடம் நடத்தையைக் ஒப்புவிப்பது ஒரு அலாதி சுகம்.
இப்படியாக அம்மாவைப் பெண் பாராட்டுவதும், பெண்ணை அம்மா பாராட்டுவதும் மூன்று மாதங்கள்க் கழிந்தன. அன்றும் இதே போல் ஆபீஸ் இருந்து வந்ததும் வராததுமாக தலையைப் பிடித்துக் கொண்டு இருந்தாள் மதுவந்தி .அவளாகவே கூறட்டும் என்றுப் பொறுமையாக இருந்தாள்.
இரவு உணவு முடித்து விட்டு,அம்மா உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் என்று பீடிகை மிகப் பெரியதாக இருந்தது. கேட்டுத் தான் பார்ப்போமே என்று செவிச் சாய்த்துக் கேட்டாள்.
விஷயம் இது தான், கூட வேலைப் பார்க்கும் பெண் தப்பான உறவு, ஒருவனை நம்பி மோசம் போய் விட்டாள். வீட்டிற்குச் செய்தித் தெரிந்து அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். எங்கே வசிப்பது, இனிமே வாழ்க்கை என்ன? பல விடைத் தெரியாத கேள்விகள். திக்குத் தெரியாத காட்டில் விட்டால் போன்று.
கேட்டக் கதையை ஜீரணிக்க ஒரு நிமிடம் அவகாசம் தான் தேவைப்பட்டது ,மறு வினாடி, அவளை இங்கே நம் வீட்டிற்கக் கூட்டிக் கொண்டு வா என்று உத்தரவு இட்டாள்.இதே தான்.
இது போலவே தான், ஒரு நாள், சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்து முடிந்தது .அப்போது ஒரு பெரியவர் தனக்குத் தங்க இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்து உதவினார். இதோ இப்போது என்னுடைய முறை.
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று பாடிச் சென்று விட்டார்ப் பாரதி, இப்போது "என்று தணியும் இந்தப் பெண்(ஏமாந்த) அநீதி" என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டு அந்தப் பெண்ணை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment